Monday, June 8, 2020

அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர் thanks to dinamalar.com


அதீத எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களைத் தாக்குமாம் அல்சைமர்!

Advertisement
எதிர்மறை எண்ணங்கள், அல்சைமர்,  Alzheimers, dementia, Negative thinking, Study, researchers, london, new study, Dr. Natalie Marchant,  psychiatrist, PET  brain scan, positron emission tomography, Alzheimer's disease, anxiety, depression
9Shares
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
லண்டன்: வயதான காலங்களில் ஏற்படும் அல்சைமர், டிமாண்டியா உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவயதில் ஏற்படும் எதிர்மறையான எண்ண சுழற்சியே காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபித்துள்ளனர்.

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜ் மனோதத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் நடாலீ மர்சண்ட் இதனைத் தனது ஆய்வு மூலம் தெரிவித்துள்ளார். 55 வயதுக்கு மேற்பட்ட 350 பேருக்கு போசிட்ரான் எமிஷன் டோமோகிராபி மூளை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும் டோ மற்றும் பெடா செல்கள் அதிகரிக்க கடந்த கால வாழ்கையில் செய்த தவறுகள் மற்றும் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் கவலை ஆகியவையே முக்கிய காரணிகளாக விளங்குக்கிறது என இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

latest tamil news




மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளவர்களது மூளையில் இந்த செல்களின் படலம் குறைந்து காணப்படுகிறது. மூளையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் ஹார்மோனான செராட்டினான் சுரப்பு மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் பதற்றம் மற்றும் மன அழுத்தும் அதிகமாக உள்ளவர்களது மூளையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களிடம் இந்த டாவ் மற்றும் அமிலாய்டு படலம் அதிகமாக காணப்படவில்லை.

எப்போதும் எந்த விஷயத்துக்கும் பதற்றம், பயம் அடையாமல் அதீத எதிர்மறை எண்ணங்களை மனதுக்குள் குப்பைபோல சேர்க்காமல் இருப்பதே இந்த வயதான காலத்தில் டிமாண்டியா, அல்சைமர் போன்ற உயிரைப் பறிக்கும் மன நோய்களில் இருந்து விடுபட சிறந்த மருந்து. ஆகவே எப்போது மனதை புது மலர்போல புத்துணர்ச்சியுடன் வைக்கக் கற்றுக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment