Thursday, January 2, 2020

மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்

தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,

சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த

சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?

திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?



பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்

விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,

திருவடியும், கையும், திரு வாயும், செய்ய

கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?

கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே?



மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,

படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது

நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?

‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே?

விளக்கம்

No comments:

Post a Comment