Sunday, January 26, 2020

En Palli Kondeerayya - Ragamalika - Adi

ஏன் பள்ளீ கொண்டீரய்யா?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே

ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே
ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே-அவதரித்த இரண்டாற்று நடுவிலே

அவதரித்த இரண்டாற்று நடுவிலே
ஏன் பள்ளீ கொண்டீரய்யா?
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ?
அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?
பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
ஈசன் வில்லை முறித்ததர்க்கோ?

பரசுராமனுரம் பரித்ததர்க்கோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?
மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ?

காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ?
ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ?

கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ?

ராவணாதிகளை முடித்த வருத்தமோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா?

மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ?
எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?

எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ?
துதி செய் ஆயர்களை காக்க வேண்டி மலை தூக்கி அலுத்தீரோ?
ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி அலுத்தீரோ?
மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ?
சகடுருளை தேய்தோ? Kamsan உயிரை மாய்த்தோ?
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ?
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ?
ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதா!
By bhas96

No comments:

Post a Comment