Monday, July 31, 2017

எதற்கும் மலைக்காதீர்கள்! 
 எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23ஜூலை
2017 
00:00
ஓட்டுனர் உரிமத்தை, உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறிய, இருவரது வாக்குமூலங்கள் இது...
'என்னை மாதிரியான ஒரு முட்டாளை நீங்க பார்க்கவே முடியாது. 'லைசென்ஸ்' முடிஞ்சு போனதை கவனிக்காம, இத்தனை நாளா, வண்டி ஓட்டியிருக்கேன்; ஏதாச்சும் விபத்து நடந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்... சே... இனிமே நடையா நடந்து, லஞ்சம் குடுத்து புதுப்பிக்கிறதுக்குள்ளே உயிர் போயிடும்...' 
மற்றொருவரோ, 'லைசென்ஸ் முடிஞ்சதை, எப்படியோ கவனிக்காம இருந்துருக்கேன்; ஒண்ணும் பிரச்னையில்லை... நாளைக்கே லீவை போட்டு, புதுப்பிக்கிற வேலையில இறங்கிட வேண்டியது தான்...'
'பொண்ணு, குதிரா வளர்ந்து நிக்குறா; இவளுக்கு, எப்படி, திருமணம் செய்ய போறேன்னே தெரியல...'
'ரொம்ப கஷ்டமான வேலை... முதலாளி சரியான சிடு மூஞ்சி; சும்மாவே திட்டி தீர்ப்பான்... எப்படா, ஒரு சின்ன தப்பு செய்வேன்னு, கண் கொத்தி பாம்பா, கவனிச்சிக்கிட்டே இருப்பான்; நெனைச்சாலே தலைய சுத்துது...'
'மேடையில், பெரிய பொறுப்பை குடுத்திருக்கீங்க... சரியா நடத்தி, உங்க எல்லார்கிட்டேயும், நல்ல பேர் வாங்குறது, ரொம்ப கடினம்கிற மாதிரி உணர்கிறேன். இப்ப கூட, ஒண்ணும் கெட்டுப் போகல; யாராவது முன் வந்தீங்கன்னா, என் பதவியை, விட்டு கொடுக்க, தயாரா இருக்கேன்; யார் முன் வர்றீங்க...'
- இப்படியெல்லாம், ஒவ்வொன்றிற்கும் மலைக்கிற மனிதர்களை, கடந்து வந்திருப்பீர்கள்.
உளவியலின் அடிப்படையில் சொல்கிறேன்... மலைப்புடன் ஒரு பணியை மேற்கொள்கிற போது, பொறுப்பின் கனத்தை, அதிகமாக்கி விடுகிறோம். அத்துடன், முதல் கட்டமாக, தங்களது சுவாரசியத்தை குறைத்து விடுகின்றனர்; சுவாரசிய குறைவாக ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள், மேலும் சிரமமானவையாக 
ஆகி விடுகின்றன.
மலைப்பு குணத்தின் இன்னொரு மோசமான அம்சம் என்ன தெரியுமா... சோம்பல் எனும் எதிர்மறை சக்தியை உருவாக்கி விடுவது தான். சுவாரசிய குறைவும், சோம்பலும் மோசமான இரட்டையர்கள்; இந்த இரண்டும் கை கோர்த்தால், வெற்றியையும், பணி நிறைவையும், நிர்மூலமாக்கி விடும்.
நம்மை மலைக்க வைக்கும் எதுவும், நமக்குரிய சவால்கள், நம் திறமைகளை பட்டை தீட்ட வந்த சாணை கற்களே தவிர, நம்மை நசுக்க வந்த சுத்தியல்கள் அல்ல! ஆக, நாம் வாழ்வின் பார்வைகளை, சிறிதளவு மாற்றிக் கொண்டால் போதும்.
எதிர்கொண்டே ஆக வேண்டிய சவால்களை, இது என்னுடைய கடமை என்று விரும்பி ஏற்று செய்தால், சுமையாக இருக்காது. 'கடனே...' என்று செய்தால், மலைப்பு தான்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, 'நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லாதீர்கள்; இஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லுங்கள். இப்படி சொன்னால், படிப்பு என்பது சுமையாகவும், மலைப்பாகவும் தெரியாது...' என்பேன். 
இது, மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்!

No comments:

Post a Comment