Monday, July 10, 2017

manapada padalkal

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்

கோவினுக் கருங்கலம் கோட்டமில்லது

நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.


விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என்உள்ளம் கவர்ந்தானை

அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.


பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா

வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே

செயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி

வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

No comments:

Post a Comment