Monday, July 31, 2017

சொல்கிறார்கள்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01ஆக
2017 
00:00
'கம கம' பற்பசையில் இருக்கு ஆபத்து!

இயற்கை மருத்துவர், நா.நாச்சாள்: இன்று நிறைய பேருக்கு மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய் உள்ளிட்ட புளிப்பு காய்களை சாப்பிட்டால் பல் கூசுகிறது. ஆரோக்கியமான பற்களின்றி, தேங்காயையே கடித்து சாப்பிட முடியாதவர்கள், கரும்பை எப்படி கடித்து சாப்பிட முடியும்! தவிர, பல் சொத்தை, பல் வலி, ஈறு வலி, ஈறு வீக்கம், பல் ஆட்டம், வாய் நாற்றம், சீழ் வடிதல் என, தொந்தரவுகளுக்கு குறைவே இல்லை.விளம்பரங்களுக்கும், தனிப்பட்ட நிறுவன சூழ்ச்சிக்கும், வியாபார தந்திரத்துக்கும் குழந்தைகளை நாம், காவு கொடுத்து கொண்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணம், 25 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பற்பசை விளம்பரம், 'உடலுக்கு பாலும், பாதமும்... பற்களுக்கு உப்பும், கரித்துாளுமா... என்ன கேவலம்' என்றது. இன்றோ, 'உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா...' என்கிறது.பற்களை வெண்மையாக்கவும், நன்கு நுரை வரவும், நல்ல மணம், சுவையுடன் இருக்க அதிக ரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன இன்றைய பற்பசைகள். அது மட்டுமின்றி, பயன்படுத்துவோருக்கு ஒருவகை ஈர்ப்பை அளித்து, தொடர்ந்து அதையே உபயோகிக்கும் எண்ணத்தையும் துாண்டுகின்றன.தவிர, பற்பசையில், 'நிக்கோடின்' உள்ளிட்ட பொருட்களும் இருப்பதால், அதை பயன்படுத்துவதால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாக காரணமாகிறது. ஒரு சிகரெட்டில் இருக்கும் நிக்கோடினின் அளவை விட, அன்றாடம் ஒருமுறை பயன்படுத்தும் பற்பசையில் அதிக நிக்கோடின் உள்ளது. பற்பசையில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள், அதை முழுங்க, நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.பற்பசைகளை அதிக அளவு எடுத்து கொள்வதாலும், அதிக நேரம் பற்களை துலக்குவதாலும் பற்களின், 'எனாமல்' பாதிக்கப்படுவதுடன், நாக்கின் சுவை மொட்டுக்கள் உணர்விழந்து, நரம்பு மண்டலம் வரை பாதிப்பை உருவாக்குகிறது.வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம், சீரான உணவு பழக்கமின்மை தான். இதை மாற்றிக் கொள்ளாமல், 'கம கம' பற்பசையை கொண்டு சரி செய்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.மேலும், வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தல், நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்தல், ஒவ்வொரு வேளை உணவிற்கு பின் வாய் மொத்தத்தையும் நடுவிரலால் தேய்த்து சுத்தப்படுத்துவது என, பற்களை சுத்தப்படுத்த சிறந்த வழிகள் உள்ளன. இது தவிர, வீட்டிலேயே இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பற்பொடிகளை பயன்படுத்தியும், சுத்தம் செய்யலாம்.புதினாவை காய வைத்து பொடித்து, சரி சமமாக இந்துப்பு சேர்த்தும்; சுக்கு, கடுக்காய், இந்துப்பு சம அளவில் சேர்த்தும்; ஆலமர விழுதுப்பொடி, கருவேலம் பட்டை துாள், லவங்கப்பட்டை துாள், மிளகுத் துாள், சீரகத்துாள், இந்துப்பு ஆகியவற்றை சரி சமமாக சேர்த்து பற்பொடி தயாரித்து பயன்படுத்தலாம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி, புதினா, நாவல், கொய்யா, மாந்துளிர்களை காயவைத்து, அவற்றுடன் இந்துப்பு சேர்த்து, மூலிகை பற்பொடி தயாரித்து பயன்படுத்த, பற்கள் உறுதியாகும்; பற்களில் ஏற்படும் தொந்தரவுகளும் சரியாகும்.மாற்றத்தை நோக்கி நாம் மாறாதிருந்தால், விரைவில் வேப்பங்குச்சிகளையும், ஆலங்குச்சிகளையும் அயல்நாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள், 'ஏசி' போட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் சந்தைப்படுத்திவிடும்.

No comments:

Post a Comment