Tuesday, November 13, 2018


 பதிவு செய்த நாள் : மே 24, 2018 


  சொல்கிறார்கள்

தொண்டை பிரச்னைக்கு 'குட்பை!'பனங்கற்கண்டின் சிறப்பு குறித்து கூறும், இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்: பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரை, பதமாக காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.மேலும், 100 கிராம் பனங்கற்கண்டில், 0.20 கிராம் புரதம், 0.04 கிராம் கொழுப்பு, 98.76 கிராம் சர்க்கரை, 0.30 கிராம் உலோக உப்புகள், 58.70 மி.லி., கிராம் கால்ஷியம், 5.40 மி.லி., கிராம் பாஸ்பரஸ் உள்ளது.பூண்டுப்பாலுடன், பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப் பற்களை, 50 மி.லி., பால், 50 மி.லி., தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும், இரண்டு சிட்டிகை மஞ்சள் துாள், இரண்டு சிட்டிகை மிளகுத்துாள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி, கடைய வேண்டும். இதை, இரவில் துாங்கப் போவதற்கு முன் குடித்தால், நெஞ்சில் கட்டியிருக்கும் சளி அகலும்; வாயுத் தொல்லையும் நீங்கும்.பாலுடன், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பதால், சின்னம்மை, பெரியம்மை மற்றும் வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாகும்; தாகமும் தணியும்.முருங்கைப் பூவை, பாலில் வேகவைத்து, பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால் முருங்கைப்பூப் பால் தயார். இதை இரவு உறங்குவதற்கு முன் குடித்தால், உடலில் புதுத்தெம்பு கிடைக்கும். உடல் மெலிந்த குழந்தைகள், பார்வைக் குறைபாடு உள்ளவர், ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு, இந்த முருங்கைப்பூப் பால் ஒரு வரப்பிரசாதம்.அதிமதுரத்துடன், வால்மிளகு, பனங்கற்கண்டு, தண்ணீர் சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் குடித்தால் தொண்டைப்புண் சரியாகும்.சுக்கு, மிளகு, திப்பிலியைப் பொடியாக்கி, அதோடு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.பாடகர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், ஆசிரியர்கள் என, குரலை பயன்படுத்தி பணியாற்றுபவர்களுக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.கர்ப்பிணிகள், சில நேரங்களில் சிறுநீர் பிரியாமல் அவதிப்படுவர்; வெந்நீருடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால், சீக்கிரம் சிறுநீர் வெளியேறும்.

No comments:

Post a Comment