Tuesday, November 13, 2018

ஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்! thanks to aval vikatan

ஆண்களுக்கு இருக்கவேண்டிய நான்கு குணங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
தின்பருவக் குழந்தைகள் காதல் கொள்வது இயல்பு. ஆனால், பெற்றோரால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஆண் குழந்தைகளின் பதின்பருவக் காதலை இயற்கையின் இயல்போடு பெற்றோர் புரிந்துகொள்ள விளக்கம் அளிக்கிறார், மனநல மருத்துவர் ஷாலினி.

டெஸ்டோஸ்டிரோன் சயின்ஸ்

``ஓர் ஆணுக்குப் பதின்பருவம் என்பது பல மாற்றங்களை உள்ளடக்கியது. மிகவும் முக்கியமான மாற்றம் என்னவென்றால், அதுவரை குழந்தைமையாக  இருந்த அவன் மனமும் மூளையும் உடலும் அதன்பின் ஆண்மைப்படுத்தப்படும். ஓர் ஆண் மகவு கருவில் வளரும்போது, அதன் விந்துப்பைகள் வயிற்றுக்குள் சிறுநீரகத்துக்குப் பக்கத்தில் இருக்கும். பிறக்கும்போது, விந்துப்பைகள் வெளியில் வர வேண்டும் என்பதற்காக அதிகளவு டெஸ்டோஸ்டிரோன் அந்த உடலில் சுரக்கும். அடுத்தபடியாக, ஆண் குழந்தை வயதுக்கு வரும்போது டெஸ்டோஸ்டிரோன்  அதிகமாகச் சுரக்கும். ஓர் ஆணின் வாழ்நாளிலேயே அதிகமான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அவன் வயதுக்கு வரும்போதுதான் நடக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகச் சுரப்பதால்தான் பதின்பருவத்தில் ஆணின் உடல் ஆண்மைப்படுத்தப்படுகிறது. உயரம் கூடுவது, எலும்புகள் தடிமனாவது, தசைகள் வலிமை அடைவது, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாவது  என ஒவ்வொரு செல்லிலும் ஏராளமான மாற்றங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியினால் ஏற்படுகின்றன. இதே டெஸ்டோஸ்டிரோன் ஆணின் மூளையிலும் முக்கியமான ஐந்து மாற்றங்களை உண்டாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், எதிர்ப்பாலின ஈர்ப்பை அதிகப்படுத்துவது. இதனால்தான் பதின்பருவத்தில் ஆண் குழந்தைக்குக் காதலிக்கும் எண்ணம் அதிகமாகிறது.

செக்‌ஸுவல் அட்ராக்‌ஷன்

பதின்பருவத்தில் ஆண் குழந்தைகளுக்கு எதிர்ப்பாலின ஈர்ப்பு மிக மிக அதிகமாக இருக்கும். வேட்கை, வெறி என்றுகூட சொல்லலாம். சில குழந்தைகளுக்கு  தன் பாலின ஈர்ப்புகூட இருக்கலாம். அதுவும் இயல்பானதுதான். இந்த ஈர்ப்பெல்லாம், இயற்கையின் வலிமையான உந்துதல். அந்த உந்துதலை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து நாம் நம் குழந்தையிடம் பேசுவதே கிடையாது. அவனாக எதையாவது கற்றுக்கொண்டு, சொதப்பி மாட்டிக்கொண்ட பிறகுதான் நாம் குழம்பித் தவிப்போம். ஆனால், நாம் செய்ய வேண்டியது வேறு. ‘இந்த மாதிரியான மாற்றங்கள் உனக்குள் வரப்போகிறது, செக்ஸுவல் ஃபீலிங்க்ஸ் வரும்; ஆணுறுப்பு எழுச்சி அதிகமாக இருக்கும்; ஒரு சில நாள்களில் விந்து வெளியேறலாம்; இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; இதற்காகப் பயப்படவும் வேண்டாம்’ என்று தோழமையுடன் சொல்ல வேண்டும்.

பெண்ணிடம் எந்த லிமிட்டுடன் பழக வேண்டும்?

பெண்களின் உடல்மீது பதின்பருவ பையனுக்கு ஆசை வரும். குறிப்பாக, மார்பு, இடுப்பு உள்பட பெண்களின் உடல்பகுதிகள் மேல் மிகப்பெரிய கவர்ச்சி ஏற்படும். இயற்கை அப்படித்தான் ஆணின் மூளையை வடிவமைத்துள்ளது. அப்போதுதான் ஆண், பெண்ணை நோக்கிப் போவான். அப்படித்தான் மனித இனப்பெருக்கம் நீடிக்கும்.

ஆண், பெண்ணை அணுகுவது, பெண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவிப்பது, பெண்மீது காதல்கொள்வது எல்லாமே இயல்பானதுதான். இவை வயதுக்கு வந்த ஆண்களுக்கு இயல்பாக நடப்பதுதான். இதை அவர்களால் தவிர்க்க முடியாது. சில பெண்களைப் பார்த்தால் சில காரணங்களுக்காக ஆசை, கவர்ச்சி, சபலம், காதல் என்று எதுவும் தோன்றலாம். அதற்கு அடுத்த கட்டம்தான் முக்கியமானது.

‘இந்தப் பெண்ணின் மீது எனக்குக் கவர்ச்சி உண்டாகிறது. அந்த உணர்ச்சியை நான் எப்படிக் கையாள்வது?', `அதை வெளிப்படுத்த வேண்டுமா, வெளிப்படுத்தக் கூடாதா?’, `அவளைத் தொடலாமா, தொடக்கூடாதா?’ - இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஆணுக்கு ஏற்படுகிறது. சரி... ஓர் ஆண் தன் காதலைப் பெண்ணிடம் எப்போது வெளிப்படுத்தலாம்? அந்தப் பெண்ணுக்கும் அவன் மீது விருப்பம் இருக்கிறது, அவளும் அவனிடம் பேசுவதை, பழகுவதை விரும்புகிறாள் என்று உறுதிப்படுத்திய பிறகுதான். அடுத்ததாக, லேசாகத் தொட அவள் அனுமதிக்கிறாள் என்றால், மேற்கொண்டு தொடலாம் என்று நினைக்கக் கூடாது. லேசான தீண்டல்களையே அவள் அனுமதிப்பாள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்களைப் புரிந்துகொள்வது எப்படி?

பதின்பருவ ஆண்களின் அளவுக்கு, பதின்பருவப் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் இருக்காது. அவர்களின் மூளை  அமைப்பு வித்தியாசமானது. தனக்கான ஆணை பெண்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? இவன் நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா, இவன் நம்மைப் பத்திரமாகக் காப்பாற்றுவானா என்றே முதலில் யோசிப்பார்கள். எனவே, ‘நான் நம்பிக்கைக்குரிய பையன்; உன் மேல் எனக்கு ஆசை அதிகம் இருந்தாலும், அதைவிட அக்கறை அதிகமாக இருக்கிறது; உனக்காகக் காத்திருப்பேன்’ - இதுதான் ஆண்கள் பெண்களிடம் தங்களை வெளிப்படுத்த வேண்டிய முறை. இந்த அணுகுமுறைக்காகத்தான் பெண்கள்  காத்திருப்பார்கள்.

ஆண்களுக்கு அவசியமான நான்கு பண்புகள்!

பெண்களுக்குண்டான நான்கு குணங்கள் என்றால் உடனே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என மனப்பாடமாகச் சொல்வார்கள் பலர். இதுபோல, ஆண்களுக்குண்டான நான்கு குணங்கள் பற்றித் தெரியுமா? தன்மை, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. அதாவது, கண்ணியமாக இருப்பது, ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெறுவது, தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடிவது, பின் விளைவுகளை யோசித்துச் சரியாக முடிவெடுப்பது... இவை நான்கும் ஆண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது... அதனால் அவளைத் தொட்டேன்’ என்பது ஆண்மை கிடையாது. தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவனே நல்ல ஆண்மகன் என்று, ஆண் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். குறிப்பாக, ‘இந்த வயதில் உனக்கு செக்‌ஸுவல் உணர்வு வரும். அது மிக வலிமையாக இருக்கும் என்றாலும், அதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அவசரமாக யூரின் வந்தால் க்ளாஸ் ரூமில் போக மாட்டோம் இல்லையா? பசிக்கிறது என்பதற்காக  யாரோ ஒருவரின் தட்டில் இருந்து அள்ளிச் சாப்பிட மாட்டோம் இல்லையா? ஒவ்வொன்றுக்கும் ஒரு சமூக அறம் (எத்திக்ஸ்) இருக்கு... அதை நாம் பின்பற்றணும். அதேபோல, பெண்ணிடம் காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் மேனர்ஸ் உண்டு’ என்று  ஆண் குழந்தைகளிடம் பேச வேண்டும்; பேசித்தான் ஆக வேண்டும். வரும் தலைமுறை ஆண்-பெண் உறவில் சுயநலம் ஓங்காமல் இருக்கவும், வன்முறை தலைதூக்காமல் இருக்கவும் இவையெல்லாம் காலத்தின் அவசியம்

No comments:

Post a Comment