Tuesday, November 13, 2018

முருங்கை கீரை இட்லி பொடி!இன்று

Advertisement

பதிவு செய்த நாள்

02நவ
2018 
00:00

தேவையான பொருட்கள்:
நிழலில் உலர்த்திய முருங்கைக் கீரை - 2 கப்
உளுந்து - 1 கப்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 20
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி.

செய்முறை:
வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், உளுந்து, பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு, சிவக்க வறுக்கவும். இந்த கலவையுடன், முருங்கை கீரையை நன்றாக கலக்கவும்.
இந்த கலவை ஆறிய பின், தேவையான உப்பு போட்டு பொடியாக அரைக்கவும். முருங்கை கீரை இட்லி பொடி தயார்.
இந்த பொடியில், நல்லெண்ணெய் ஊற்றி, இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இரும்புச்சத்து கிடைக்கும். உளுந்து கலந்துள்ளதால், இடுப்பு வலியை தீர்க்கும் மருந்து ஆகும்.
- மு.அமுதா, மதுரை.

No comments:

Post a Comment