Friday, March 27, 2020

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை


கும்பகர்ணனுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமா கிண்டலும் கேலிப் பேச்சும் அவனுக்கு வருமா ?
  
 வரும் என்று கம்பன் காட்டுகிறான். 

  
 யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன்இராவணனிடம் சொல்கிறான். 

  
  
 "இராவணாநமக்கு என்ன குறை இருக்கிறது காலினால் கடலை கடந்த அனுமன் இருக்கிறான்சிறை விட்டு செல்லாத சீதை இருக்கிறாள்வாலியின் மார்பு துளைத்த இராமனின் அம்புகள் இருக்கின்றன அவற்றை வாங்க நாம் இருக்கிறோம் ...நமக்கு என்ன குறை?"

  
 ----------------------------------------------------------
 'காலினின் கருங் கடல் கடந்த காற்றது 

 போல்வன குரங்கு உளசீதை போகிலள்; 

 வாலியை உரம் கிழித்து ஏக வல்லன 

 கோல் உளயாம் உளேம்குறை உண்டாகுமோ? 

 ----------------------------------------------------------
  
 காலினின் = காலால் உந்தி 

  
 கருங் கடல் = கரிய கடலை 

  
 கடந்த = கடந்ததாண்டி வந்த 

  
 காற்றது போல்வன = காற்றைப் போன்ற 

  
 குரங்கு உள = குரங்கு (அனுமன்) உள்ளான் 

  
 சீதை போகிலள் = சிறை விட்டுப் போகாத சீதை நம்மிடம் இருக்கிறாள் 

  
 வாலியை = வாலியை 

  
 உரம் கிழித்து = வலிமையை கிழித்து 

  
 ஏக வல்லன = போக வல்ல 

  
 கோல் உள; = அம்புகள் உள்ளன (இராமனிடம்)

  
 யாம் உளேம்; = அவற்றை மார்பில் வாங்க நாம் இருக்கிறோம் 

  
 குறை உண்டாகுமோ? = நமக்கு வேறு குறை என்ன இருக்கிறது ? 

  

No comments:

Post a Comment