Friday, March 27, 2020

கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும்

கம்ப இராமாயணம் - கைகேயி வரமும் தசரதன் புலம்பலும் 


தசரதனின் கடைசி காலம் புலம்பலில் முடிகிறது. முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். 

கைகேயிடம் கெஞ்சுகிறான். 

இராமன் மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறி விடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்...

தசரதன் தவிக்கிறான்....அந்த தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான் 


கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்
என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?பெண்ணே! வண்மைக் கைகேயன் மானே! பெறுவாயேல்மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற”

No comments:

Post a Comment